வியாழன், 16 ஜூலை, 2015

Movie On Demand @DTH:

Movie On Demand @DTH:





டிடிஎச், அல்லது தொலைக்காட்சியில் திரைப்படத்தினை முதலில் வெளியிடுவது அல்லது DVD,VCR Tape, வடிவில் மட்டுமே திரைப்படத்தினை வெளியிடுவது போன்ற நடைமுறைகள் ஹாலிவுட்டில் நீண்டகாலமாகவே இருக்கிறது.

பெரும்பாலும் இண்டிபென்டன்ட் மூவி மேக்கர்ஸ் எனப்படும் சிறு படத்தயாரிப்பாளர்கள் இவ்வாறு செய்வது வழக்கம். குறைவான பட்ஜெட்டில் ஹாரர், ஆக்‌ஷன், கொஞ்சம் கில்மா கலந்து படம் எடுத்துவிட்டு நேரடியாக சேனல்கள், டிவிடி, டேப் என வெளியிட்டு காசுப்பார்த்து விடுவார்கள்.

பின்னர் படம் நல்ல வரவேற்பு பெற்றால் பெரிய அளவில் தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்யும் வழக்கம் உண்டு. இப்படி முதலில் வீடியோ டேப்பில் வெளியாகி பட்டையை கிளப்பி ,பின்னர் திரைக்கு வந்து கலக்‌ஷணை அள்ளிய ஹாலிவுட் திரைப்படங்கள் நிறைய உள்ளன. இதற்கு சிறந்த உதாரணம், எவில் டெட் என்றப்படமாகும்.

ஆனால் இம்முறை சிறிய பட்ஜெட் படங்களுக்கே நல்ல வியாபார யுக்தியாகும், பெரிய பட்ஜெட் படங்களுக்கு சரிப்படாது, எனவே ஹாலிவுட்டில் உள்ள பெரிய ஸ்டூடியோக்கள் இம்முறையில் வெளியிடுவதில்லை.

இந்தியாவிலும் கூட சில ஆண்டுகளுக்கு முன்னரே ,அரங்குகளில் படம் வெளியான சில நாட்களில் டிடிஎச் சில் மூவி ஆன் டிமாண்ட் முறையில் வெளியிட்டுள்ளார்கள்.

 2009 ஆம் ஆண்டு தீபாவளியன்று வெளியான Main Aurr Mrs Khanna என்ற இந்தி திரைப்படம் வெளியான நான்கே நாட்களில் ரிலையன்ஸ் பிக் டீ.வி, மற்றும் டிஷ் டிடிஎச் இல் வெளியானது. தயாரிப்பாளரும், டிடிஎச் நிறுவனமும்  50:50 என விகிதத்தில் லாபத்தினை பகிர்ந்து கொண்டார்கள்.




சல்மான்கானின் ரெடி, What s your Rashee, Kaminey, Rock On!!, Delhi 6, The President is Coming, Jodhaa Akbar and Aa Dekhe Zara.போன்ற படங்கள் படம் வெளியான முதல் வாரத்திலிருந்து டி.டிஎச் இல் மூவி ஆன்  டிமான்ட் அல்லது பே பெர் வியு முறையில் வெளியிடப்பட்டுள்ளது.

link: http://www.dnaindia.com/money/report_dth-emerging-channel-for-movie-releases_1300685

படத்தின் தயாரிப்பு மதிப்பு, ஸ்டார் வேல்யு, எவ்வளவு சீக்கிரம் டிடிஎச்சில் வெளியாகிறது என்பதை பொருத்து ஒரு படத்திற்கு 25 ரூ முதல் 150 ரூ வரையில் கட்டணம் நிர்ணயம் செய்கிறார்கள்.

ஆனால் விஷ்வரூபம் படத்தினை டிடிஎச்சில் பார்க்க 1000 ரூபாய் வரையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் வருவதால், அதிகம் பேர் அவ்வளவு அதிக தொகை கொடுத்து பார்க்க விரும்ப மாட்டார்கள் என சொல்லலாம்.

திருட்டு டிவிடி, இணைய தரவிறக்கத்தினை தடுக்க எனில் மலிவான கட்டணம் என்றால் மட்டுமே மூவி ஆன் டிமான்ட் மூலம் பலன் இருக்கும், அதிக கட்டணம் என்றால் , மலிவான திருட்டு டிவிடிக்கே மக்கள் போவார்கள். திருட்டு டிவிடியில் பார்க்க விரும்ப காரணமே திரையரங்க கட்டணம் அதிகமானதால் தான் ,அவ்வாறு இருக்க டிடிஎச் இல் இன்னும் அதிகம் கட்டணம் வாங்குவது எப்படி திருட்டு டிவிடிக்கு போட்டியாக அமைந்து கட்டுப்படுத்தும்?

ஏன் எனில் நல்ல தரமான திரையரங்கில் ,பெரிய திரையில் பார்க்கவே ஒருவருக்கு 120 ரூ தான் கட்டணம் எனும் நிலையில் ஒரு குடும்பத்தில் 5 பேர் திரையரங்கு சென்றாலும் 600 ரூ தான் கட்டண செலவு. மேலும் ஆன் லைன் புக்கிங்க் எல்லாம் உள்ள சூழலில் கொஞ்சம் முன்கூட்டியே முயன்றால் டிக்கெட் வாங்கிவிடலாம். எனவே அவசியம் லோகநாயகர் படம் பார்க்க நினைக்கும் குடும்பம் திரையரங்கில் பார்ப்பதே மலிவாகவும், நன்றாகவும் இருக்கும் எனவே டி.டிஎச்சில் 1000 ரூ கொடுத்து பொது மக்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள் எனலாம்.

தீவிர லோகநாயகர் ரசிகர்கள் மட்டுமே முதல் நாள் ,முதல் காட்சி பார்க்கும் ஆசையில் டி.டிஎச்சில் 1000 ரூ கொடுத்து படம் பார்க்கலாம்.பொது மக்கள் பார்க்கப்போவதில்லை.மேலும் தொலைக்காட்சியில் பார்த்தால் பெருமையாக விளம்பரப்படுத்தப்பட்ட  BARCO AURO:3D-11.1   இன் ஒலியமைப்பையும் அனுபவிக்க முடியாது போன்ற காரணங்களும் டிடிஎச் ரிலீஸ் முறைக்கு பின்னடைவையே சேர்க்கும்.

பட வெளியீடுக்கு முன்னர் டிடிஎச்சில் வெளியிடுவது  திருட்டு டிவிடி தயாரிப்பவர்களுக்கே லாபகரமான எளிய வழியாக இருக்கும், வெறும்  1000 ரூ கொடுத்து படம் பார்த்துவிட்டு எளிதாக டிவிடி தயாரித்து விடுவார்கள், இதனால் ஒரே நாளில் தரமான திருட்டு டிவிடி கிடைக்க ஆரம்பித்துவிடும், First Day Frist Show வின் பொழுதே திரையரங்க வாயிலிலேயே திருட்டு டிவிடி விற்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை,இணையத்திலும் அப்லோட் செய்துவிடுவார்கள்,எனவே திரையரங்கங்களின் வசூல் கடுமையாக பாதிக்கப்படவே வாய்ப்புள்ளது.

டிடிஎச்சில் என்கிரைப்டட் வடிவில் இருக்கும் ,அதனை பதிவு செய்ய முடியாது என நினைக்கலாம், எளிதாக பதிவு செய்யலாம் , பல செட் டாப் பாக்ஸ்களில் பதிவு வசதியுடன் இருக்கிறது டிவிஆர் செட் டாப் பாக்ஸ் என்பார்கள், ஒரு வேளை டிடிஎச் நிறுவனம் ஏதேனும் முறையில் செட்டாப் பாக்ஸில் பதிவு செய்வதை தடுத்தாலும் , இன்னொரு முறையில் பதிவு செய்யலாம் , அது எப்படி என பார்ப்போம்.

SET TOP BOX TO COMPUTER:

இரு முறைகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சியினை கணினியில் காணலாம்.



#.தற்போது வரும் நவீன எல்.இடி டீவிக்களில் HDMI port or wireless networking எல்லாம் உள்ளது எனவே அவற்றின் மூலமும் கணினி, மடிக்கணினியை இணைக்கலாம், பின்னர் விண்டோஸ் மீடியா சென்டர்* மூலம் நிகழ்ச்சியைக்காணலாம் ,பதிவு செய்துக்கொள்ளலாம். அல்லது பல விடியோ கேப்சர் மென்பொருள்கள் உள்ளது அதன் மூலமும் செய்யலாம்.

All in One Media center PC என பல நிறுவனங்களும் கணினி தயாரித்துள்ளன, அவற்றில் புளுரே/டிவிடி ,டிவீ டியுனர் ,HDMI,DVI,USB,LAN,CO-AXIAL jack , CARD Reader,என அனைத்தும் இருக்கும், செட் டாப் பாக்சில் இருந்து இணைப்பை கொடுத்து விண்டோஸ் மீடியா சென்டர்*மூலம் டி.வீ பார்க்கலாம், பதிவும் செய்யலாம்.




* விண்டோஸ் மீடியா சென்டர் மூலம் டீ.வீ பார்க்கும் போது மட்டுமே தொலைக்காட்சி நிறுவனம் சில நிகழ்ச்சிகளை பதிவு செய்வதை கட்டுப்படுத்த முடியும், எனவே மாற்று மென் பொருளை பயன்ப்படுத்தலாம், அல்லது தனியாக ஒரு டீவி ட்யுனர் கார்ட் மற்றும் அதன் மென்பொருளைப்பயன்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

#செட் டாப் பாக்சில் அனலாக் மற்றும் டிஜிட்டல் அவுட் புட் என இரண்டும் உள்ளது , அதன் அவுட் புட்டினை நேரடியாக எடுத்து ஒரு டி.வி டியுனர் கார்டின் மூலம் கணினியுடன் இணைக்கலாம், பின்னர் கணினில் பதிவும் செய்துக்கொள்ளலாம்

நேரடியாக செட் டாப் பாக்சினை டிவி டியுனர் கார்டு மூலம் கணினியில் இணைத்து பதிவு செய்யும் முறையை விளக்கமாக காணலாம்.

சந்தையில் 1,500 ரூபாய்க்கு எல்லாம் தரமான எக்ஸ்டெர்னல் யு.எஸ்.பி டீ.வி டியுனர் கார்டுகள் கிடைக்கிறது.200 சேனல்கள் வரையில் காண முடியும், மேலும் எஃப்.எம் வானொலியும் கேட்கலாம்.

உதாரணமாக iBall என்ற நிறுவனத்தின்  External USB T.V Tuner card பற்றி பார்க்கலாம்.



இது ஒரு பென் டிரைவ் அளவிலேயே இருக்கும், ஒரு பக்கம் யு.எஸ்.பி மேல் சாக்கெட்டும் ,மறுபக்கம் அனலாக் கோஆக்சியல் கேபிளை இணைக்க சாக்கெட்டும் இருக்கும்.



டிஜிட்டல் AV cable இணைக்க மினி யுஸ்பியுடன் சாக்கெட்டும் உள்ளது. இதில் மினி யுஸ்.பி  AV cable  அடாப்டர் கொண்டு இணைத்துக்கொள்ளலாம், இவை எல்லாமே நாம் வாங்கும் டியுனர் கார்டுடன் அளிக்கப்பட்டுவிடும்.மேலும் ரிமோட் கண்ட்ரோல் எல்லாம் உண்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சியை காண்பதற்கான மென்பொருளை கணினியில் நிறுவிக்கொண்டு வழக்கமான தொலைக்காட்சி போல நமது கணினியில் , பதிவு செய்யும் வசதியுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காணலாம்.



இம்முறையில் ஒரு சேனலில் ஒளிப்பரப்பப்படும் நிகழ்ச்சியைப்பார்த்துக்கொண்டு இன்னொரு சேனலின் நிகழ்ச்சியை கணினியில் பதிவும் செய்துக்கொள்ளலாம்.அப்படி கணினியில் பதிவு செய்ததை இணையத்தில் டோரண்ட் மூலம் எளிதில் பகிர முடியும், மேலும் ஒருவரே வெப் ஸ்ட்ரீமிங்க் முறையில் ஒளிபரப்பவும் முடியும்.

recording tv programme:



review :

http://broadbandforum.in/consumer-electronics/74794-exclusive-iball-usb-tv-tuner.html

iBall Claro TV Tuner / AV / FM Radio.

Features:

Clear and Crisp Picture Quality
Slim USB design - easy to carry
Time Shifting - Pause Live TV and Watch later
Real-time and Schedule TV Recording
Watch TV on PC or Laptop
Free Bundled Software - Power Director for Video Capture & Edit, Power Producer for Creating Movie Discs
Listen to FM Radio
Powerful and user-friendly software
Watch and record Analog TV
Video / Audio Capture
Still Image capture with multi-shot mode
Record video in MPEG1/2/4, AVI, VCD or DVD format
Multi-Channel Preview
Scrolling Text marquee support

Powerful and user-friendly software
10-bit analog-to-digital conversion and Noise Reduction

Built-in FM: Built-in FM Radio with Recording function

Multi AV Input: Composite and S-Video inputs to connect DVD player, Set Top Box etc.

Interface: USB Interface

Remote Control: Full-function IR remote control

System Requirment:

Pentium 2.4 GHz or Centrino 1.4 GHz or above
512MB RAM
1GB free Space for Hard disk
DirectX 9.0C or higher installed
AC97 Compatible Sound Card
One Free USB 2.0 interface

OS Supported: Windows XP / Vista / 7

Package Contents:

iBall Claro TV Stick
Remote Control & Battery
Quick Installation Guide
FM Antenna
Driver CD with iBall Claro TV Software
Cyberlink Combo CD
Multi AV Cable
USB Extension Cable

MRP: Rs. 1995( market price around 1500 rs)

Warranty: 1 Year

சுட்டி: http://www.iball.co.in/Product.aspx

இன்னும் கொஞ்சம் தரமாக படப்பதிவு செய்ய வேண்டும் எனில் சுமார் 3000 ரூபாய் விலையில் AverMedia DVD EZMAKER 7 TV Tuner Card என ஒன்று உள்ளது.



அதன்விவரங்கள்:

Specifications of AverMedia DVD EZMAKER 7 TV Tuner Card

IN THE BOX

Sales Package:AverMedia DVD EZMaker 7 (Weight: 50 g), Installation CD (Driver), Installation CD (CyberLink PowerDirector 8 DE & PowerProducer 5 DVD), Quick Installation Guide, USB Cable

GENERAL

Device type:External (PC) for PC
Model ID:DVD EZMAKER 7
Part Number:C039
VIDEO
TV Recording:Yes, TV Recording in MPEG-4 (H.264) formats
Video Analog-to-Digital Converter:Yes
POWER
Input Current:5 V DC

CONNECTIVITY

Audio Jacks:Yes(In)
Audio L/R In:Yes
Video In:Yes
S-Video In:Yes
USB:USB 2.0

DIMENSIONS

Weight:50 g

OTHER FEATURES

Additional Features:Edit, Organize and Highlight Video Clips on Storyboard

WARRANTY

Domestic Term:2 Years
Service Type:Carry In

FlipKart.com போன்ற இணையவர்த்தக தளத்திலும் கிடைக்கின்றன.

http://www.flipkart.com/avermedia-dvd-ezmaker-7-tv-tuner-card/p/itmd2ryha7yuzjhw?pid=TVTD2RYK8AFHJEMV&icmpid=reco_pp_personalhistoryFooter_tv_tuner_card_1_nr

----------------------

கணினி மானிட்டர், எல்.சி.டி ஆகியவற்றையும் ,கணினி இல்லாமல் தொலைக்காட்சியாக பயன்ப்படுத்தவும் எக்ஸ்டெர்னல் டிவி. டியுனர் கார்டு உள்ளது.இதற்கு எந்த மென்பொருளும் நிறுவ தேவையில்லை, கணினியும் தேவையில்லை, மானிட்டர் மட்டுமே போதும்.

iBall External TV Box - CTV27


Features:

Watch TV on LCD / LED or CRT monitor
Plug-n-play, No Software or PC require
Full-band TV signals reception
Enjoy TV programs for leisure entertainment while working on your PC
Built-in FM Radio
High-resolution output delivers clear & stable picture without flicker

HD TV Box - Supports HD resolution up-to 1920 x 1200
3D high efficiency noise reduction to suppress noise effectively
PC / TV Switch

PIP function at PC mode allows you to adjust the size and position of the window

Child Lock function to restrict children from watching certain channels

Full-function remote control

AV interface for multi-media extension to DVD or Set-Top Box

Supports 4:3, 16:9 and 16:10 Aspect ratio

Schedule On/Off function

Built-in speaker

Built-in FM: Built-in FM Radio

Power Input: DC 5V / 600mA

RF Input: 47 - 870 MHZ

AV Input: 1Vp-p (PAL/NTSC)
Output Frequency: Horizontal: 37KHz-75KHz, Vertical: 60Hz (Refresh rate)

Resolution: 800x600@60Hz, 1024x768@60Hz, 1280x1024@60Hz, 1440x900@60Hz, 1680x1050@60Hz, 1920x1080@60Hz, 1920x1200@60Hz

TV System: PAL(SECAM)-B/G, PAL-I, PAL-D/K

Remote Control: Full-function Remote control

Package Contents: XGA TV Box, Stand, Remote Control (Batteries included), Power Adapter, VGA Cable, Stereo Audio Cable, FM Antenna Cable, AV Cable and User Manual

MRP: Rs. 1899/-
Warranty: 2 Years

http://www.iball.co.in/Product.aspx


குறிப்பு:

தொழில் முறை ரீதியாக வீடியோ கேப்சர் செய்ய பல கிராபிக்ஸ்கார்டுகள் Nvidia, pinnacle போல  உள்ளது , அவற்றை கொண்டு ,நல்ல தரத்தில் டிவிடிக்களை டிடிஎச் ஒளிப்பரப்பின் போது உருவாக்க முடியும், எனவே திரையரங்க வெளியீட்டுக்கு முன் டிடிஎச் ஒளிப்பரப்பு என்பது மொத்த வருமானத்தினை பாதிக்கும் ஒரு முடிவாகும்.
-----------------------

ஒரே கல்லில் பல மாங்காய்கள்:

ஒரு டிடிஎச் செட் டாப் பாக்ஸில் இருந்து பல டீ.விகளுக்கு இணைப்பை கொடுக்க AV splitter எனப்படும் அடாப்டர் உள்ளது. இதில் சிக்னல் பூஸ்டர் மேலும் பல அவுட் புட் முனைகள் என இருக்கும், ஆனால் அனைத்து இணைப்பிலும் ஒரே சேனலே காட்டப்படும். இம்முறையில் தான் உணவகங்கள், பார்கள் ஆகியவற்றில் பல டீ.விக்களில் டிடிஎச் நிகழ்ச்சியினை காட்டுகிறார்கள்.

1:3 AV splitter :

ஒரு செட் டாப் பாக்ஸ் மூலம் மூன்று தொலைக்காட்சிப்பெட்டிகளில் நிகழ்ச்சியினை காணப்பயன்ப்படுத்தலாம், சிக்னல் நன்றாக கிடைக்க இதில் சிக்னல் பூஸ்டரும் உள்ளது.



சென்னையில் ரிட்சி ஸ்ட்ரீட் போனால் பல பிராண்டுகள், பல விலையில் இது போன்ற உபகரணங்கள் கிடைக்கிறது, காசுக்கேற்ற தோசை போல ,கொடுக்கும் காசுக்கு ஏற்ற தரத்தில் வாங்கலாம்.
---------------------------

எனவே லோகநாயகர் தனது விஷ்வ ரூபம் படத்தினை  திரையரங்குகளுக்கு முன்னரே டி.டிஎச்சில் அதிக விலைக்கு வெளியிட்டால் அது திருட்டு டிவிடி தயாரிக்க மட்டுமே உதவும், எனவே திரையரங்குகளுக்கு செல்லும் கொஞ்சம் கூட்டமும் வீட்டோடு முடங்கி விடும் அபாயமே அதிகம் இருக்கிறது.

சிலர் சொல்லலாம் நான் டிவிடியில் படம் பார்த்தாலும் படம் நன்றாக இருந்தால் திரையரங்கிற்கும் செல்வேன் என ஆனால் அதெல்லாம் தனிநபர்களின் விருப்பம், குடும்பத்தோடு படம் பார்க்க செல்பவர்கள்  பெரும்பாலும் டிவிடியில் பார்த்தப்படத்தினை மீண்டும் பார்க்க அரங்கு செல்லும் வழக்கம் தமிழ்நாட்டில் இல்லை என்பதால் திரையரங்க விநியோகம் செய்தவருக்கு பெருத்த நட்டம் உருவாக வாய்ப்புள்ளது.

மேலும் பல இடங்களிலும் கேபிள் டீ.வீ ஆபரேட்டர்கள் டிடிஎச் சேனலை தங்களது கேபிள் ஒளிபரப்பின் மூலமும் பகிர்வதுண்டு, எனவே பல ஊர்களில் கேபிள் ஆபரேட்டர்கள் ஒரே ஒரு டிடிஎச் வைத்து ஊருக்கே படம் காட்டும் சாத்தியமுண்டு , இதனால் பெருத்த வருமான இழப்பும் ஏற்படலாம். இதனை தடுக்க எல்லா ஊரிலும் கேபிள் டீ.வீ ஆபரேட்டர்களை கண்காணிக்க ஆட்களை  நியமிக்க வேண்டும், அதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வரக்கூடியதும் அல்ல.

எனவே லோகநாயகரே சொந்தமாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்தாலும் அவருக்கும் நட்டம் தான் வரும் என்பதே டிடிஎச் சில் ரிலீஸ் செய்வதால் உண்டாகும் பலன்.

லோகநாயகர் தமிழ் திரையுலகில் தொழில்நுட்ப ரீதியாக முன் கூட்டியே சிந்திப்பவர் என  பெருமையாக அவரது ரசிக கண்மணிகள் வேண்டுமானால் சிலாகித்து கொள்ளலாம், ஆனால் அவரது தொழில்நுட்ப அறிவு 100 கோடியில் படம் எடுத்து 1000 ரூபாயில் திருட்டு டிவிடி தயாரிக்க தான் உதவும் என்பதை கூட அறியாத நிலையில் தான் உள்ளது என்பதே அடிப்படையான உண்மை!

சனி, 10 ஜனவரி, 2015

காய்ச்சல் (Fever)

காய்ச்சல் (Fever) - ஒரு நோய் அல்ல




உடம்பு நெருப்பாய் கொதிக்கிறது.நாக்கு கசந்து எதுவும் சாப்பிடப்பிடிக்க வில்லை. அலுப்பு , அமைதியின்மை, உடல் வலி , உடல் பாரம், அடித்து போட்டது போல் உடம்பு துவண்டு விடும். இது தான் காய்ச்சலின் அடையாளம். ஒரு சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை 98.6°F (37°C).இது ஆளாளுக்கு,நேரத்திற்கு நேரம் சிறிது மாறுபடலாம். ஆனால் இது 100.5°F அல்லது அதற்கு மேலே போகும்போது அதைக் காய்ச்சல் , ஜுரம் என்கிறோம்.இதனை அனுபவப்படாதவர்களே இல்லை என்னுமளவு சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது.

காய்ச்சல் ஒரு நோயா?

காய்ச்சல் ஒரு நோயல்ல, நமக்கு எதிரானதும் அல்ல . மாறாக நோய்க்கிருமிகளை ஒழிப்பதற்காக நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி போராடுவதன் பாகம் தான் காய்ச்சல். நோயுண்டாக்கும் அனேக பாக்டீரியாக்களும் வைரசுகளும் சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால் உடல் வெப்ப நிலை சிறிது அதிகமாகும்போது இந்த கிருமிகள் பெருகுவது மிகவும் கட்டுப் படுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலை வைரசுகளுக்கு ஆகாது. அது மட்டுமல்ல காய்ச்சல் நோயெதிர்ப்புத் திறனையும் அதிகப்படுத்தி அதிக வெள்ளையணுக்களையும், antibody-களையும் உருவாக்குகிறது.

காய்ச்சல் மூளையை பாதிக்குமா?

காய்ச்சல் காரணம் குழந்தைகளின் மூளை பாதிப்படையும் என அனேக பெற்றோர்கள் வீண் பயம் கொள்கின்றனர். சாதாரண காய்ச்சல்களுக்கு அவ்வாறு பயப்படத் தேவையில்லை. காய்ச்சல் 107.6°F (42°C) க்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே அத்தகைய நிலை ஏற்படக்கூடும்.



மருத்துவம் செய்யாவிட்டால் காய்ச்சல் அதிகரித்துக்கொண்டே போகுமா?

அப்படியில்லை. வைரஸ் தொற்றால் உண்டாகும் காய்ச்சல்கள் சாதாரணமாக 105°F க்கு மேல் அதிகமாவதில்லை. குழந்தைக்கு கனமான உடை,போர்வை போர்த்தியிருந்தாலோ, அதிக வெப்பமான சூழலில் இருந்தாலோ மட்டுமே உடல் வெப்பம் அதற்கு மேலே அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
காய்ச்சலால் குழந்தைக்கு ஜன்னி கண்டு விடும் என்று சில பெற்றோர்கள் அனாவசியமாக பயப்படுவார்கள். இது தேவையற்ற பயம். அபூர்வமாகவே அப்படி நிகழும். திடீரென்று உடல் வெப்பம் மிக அதிகமாகப் போனால் அத்தகைய நிலை உண்டாகலாம். எனவே அப்போது உடனே வெப்பத்தை குறைக்க முயல வேண்டும்.
காய்ச்சல் பெரும்பாலும் நோய்க்கிருமிகளால் தான் வருகிறது என்றாலும் விஷம், கேன்சர் , மற்றும் சில காரணங்களாலும் வரும்.


வெப்ப அதிர்ச்சி

அதிக வெப்பத் தாக்குதல்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும். கத்திரி வெயில் தாகுதல்கள். நெருப்பினால் உண்டாகும் வெப்பமான சூழல்களில் மாட்டிக் கொள்ளுதல் ஆபத்தானவ. இத்தகைய நிலைகளில் உடல் தன் வெப்பத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது போவதால் மரணத்தை ஏற்படுத்தி விடும். இன்னிலையில் பாதிக்கப்பட்டவரை உடனே அந்த சூழலில் இருந்து இடம் மாற்றவும். குளிர்ந்த நீரில் நனைத்த துணியை கொண்டு உடல் முழுதும் துடைத்து விடவும். ஐஸ் கட்டிகளை அக்குள் மற்றும் கழுத்து பகுதிகளில் வைத்து வெப்பத்தை உடனடியாகக் குறைக்கவும். திரவ ஆகாரங்களைக் குடிக்கக் கொடுத்து நினைவிழக்காமல் பார்த்துக் கொள்ளவும். உடனடி மருத்துவரை பார்க்கவும்.

காய்ச்சலுக்கு என்ன சிகிட்சை செய்யலாம்?

காய்ச்சல் சாதாரணமாக இருந்து வேறு ஒரு பிரச்சினையும் இல்லாதிருந்தால் எந்த வித சிகிட்சையும் தேவையில்லை. காய்ச்சலுக்கு தனியாக மருந்து எதுவும் இல்லை என்பதே உண்மை. சிகிட்சை என்பது உங்கள் உபாதையை குறைப்பது, வைரசுகளை எதிர்த்து போராட உடலுக்கு துணை செய்வது மட்டும் தான்.நிறைய நீராகாரமும் ஓய்வும் இருந்தாலே போதும் தானாகவே குணமாகிவிடும்.

குழந்தை மிகவும் பலவீனமாகி வாந்தி, நீரிழப்பு எற்பட்டு தூங்க முடியாமல் துன்பப்பட்டால் மட்டுமே காய்ச்சலை சிறிது குறைக்க முயற்சிக்கலாம். ஆனால் காய்ச்சலை முற்றிலும் இல்லாத அளவு குறைத்து விடக்கூடாது

காய்ச்சலை குறைக்க முயலும் போது
  • காய்ச்சலால் குளிர் ஏற்பட்டவரை கனத்த போர்வையால் மூடக்கூடாது.
  • வெப்பமில்லாத காற்றோட்டமான அறைகளில் கிடத்தவும். மெல்லிய ஆடைகளை அணியலாம்.தேவைப்பட்டால் மெல்லிய போர்வை உபயோகிக்கலாம்
  • இளஞ்சூடான நீரில் குளிக்கலாம் அல்லது நனைந்த துணியால் உடம்பைத் துடைத்து எடுக்கலாம்.காய்ச்சல் தணிய மருந்து எடுத்துக் கொண்ட பிறகு தான் இதை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் இவவாறு குறையும் வெப்பம் பிறகு மீண்டும் கூடிவிடும்
  • பச்சைத் தண்ணீரில் குளிக்கக் கூடாது.இது உடலை அதிகம் குளிர வைத்து நடுக்கத்தை ஏற்படுத்தி விடும்.இது நிலமையை மோசமாக்கி உடல் வெப்பத்தை அதிகரித்து விடும்.
  • முடிந்த அளவு, குளிர்ந்த திரவ ஆகாரங்கள் குடிக்க கொடுக்கவும். இது காய்ச்சலால் உண்டாகும் நீரிழப்பை ஈடு செய்யும். சளி கெட்டியாகாமல் வெளியேற உதவும்


என்ன மருந்துகள் எடுக்கலாம்?
  • Acetaminophen மற்றும் ibuprofen குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சல் குறைய உதவுகிறது.
  • 4 muthal 5 மணிக்கொருமுறை acetaminophen எடுத்துகொள்ளலாம். 6 முதல் 8 மணிக்கொருமுறை ibuprofen எடுத்துகொள்ளலாம். கைகுழந்தகளுக்கு Ibuprofen நல்லதல்ல.
  • பெரியவர்களுக்கு Aspirin நல்லது. ஆனால் குழநதைக்கு கொடுக்காதீர்கள்.
  • காய்ச்சல் மருந்துக்கள் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. சரியான மருந்து விபரங்களை படித்து விட்டு அதன் படி உபயோகிக்கவும்.
  • 3 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவரை காண்பிக்காமல் சுய வைத்தியம் செய்யாதீர்கள்.
டாக்டரை எப்போது பார்க்க வேண்டும்?
  • மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால்.100.2°F (37.9°C) மேல் காய்ச்சல் அதிகரித்தால்.
  • 3 முதல் 6 மாதக் குழந்தைக்கு காய்ச்சல்101°F (38.3°C) அல்லது அதற்கு மேல் அதிகமானால்.
  • 6 முதல் 12 மாதக் குழந்தைக்கு காய்ச்சல் 103°F (39.4°C)கு மேல் அதிகமானால்.
  • இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாளுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால்.
  • சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் காய்ச்சல் 48 முதல் 72 மணி நேரத்திற்கு மேல் நீடித்தால்.
  • 105°F (40.5°C) க்குமேல் காய்ச்சல் இருந்து சிகிட்சை செய்தும் குறையா விட்டால்.
  • எரிச்சல். பிதற்றல், சுவாசிப்பதில் சிரமம். கழுத்து விறைத்தல் ,கை கால் செயலிழப்பு, ஜன்னி ஏற்பட்டால்.
  • தொண்டை கரகரப்பு,காதுவலி,இருமல் இருந்தால்.
  • Acetaminophen போன்ற காய்ச்சல் மாத்திரைகள் பலனளிக்காவிட்டால்.
உடனே டாக்டரை பார்க்க வேண்டும்

நோய் நாடி அறிதல்:

மருத்துவர் நோயாளியை தோல், கண்கள், காது, மூக்கு, தொண்டை, கழுத்து, நெஞ்சு, வயிறு ஆகிய பகுதிகளை நன்கு ஆராய்ந்து நோய் காரணத்தை அறிவார்.
  • எவ்வளவு நாள் காய்ச்சல் நீடிக்கிறது?
  • காய்ச்சல் அதிகரித்துக்கொண்டிருக்கிறதா? அதுவும் வேகமாகவா?
  • விட்டு விட்டு காய்ச்சலா? காய்ச்சல் வந்து போகும் கால இடைவெளி எவ்வளவு? தினமும் வந்து போகிறதா?
  • காய்ச்சலுக்கு காரணம் எதாவது அலர்ஜியா?
  • காய்ச்சல் ஏறி இறங்குகிறதா?
போன்ற கேள்விகளில் காய்ச்சலுக்கான காரணம் தெரிய வரும்.
தேவைப்படும் டெஸ்டுகள்:
  • இரத்த சோதனை
  • சிறு நீர் பரிசோதனை
  • மார்பு பகுதியில் எக்ஸ் ரே சோதனை
காய்ச்சலோடு ஜலதோசம் இருந்தால் அடிக்கடி ஆவி பிடிப்பது நல்லது. நீராவியின் வெப்பம் தொண்டையும் சுவாசக்குழாயிலும் உள்ள வைரசுகளை அழிக்கிறது.
தொண்டை கரகரப்புக்கு 1 கப் தண்ணீரில் அரை தேக்கரண்டி உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது நலம் தரும்.

மருந்துகள் பாதுகாப்பானது அல்ல: 

காய்ச்சல் ஜல தோசத்திற்கு கடைகளில் கிடைக்கும் மாத்திரைகள் அவ்வளவு பாதுகாப்பானது அல்ல. "ஜலதோசம் மருந்து சாப்பிடாவிட்டால் 7 நாளில் குணமாகும். மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் குணமாகிவிடும் "என்று கூறப்படுவது நகைச்சுவைக்காக அல்ல. இம்மாத்திரைகள் பல சமயங்களில் ஒவர் டோசாகவோ, தேவையற்றதாகவோ இருக்கிறது. நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இத்தகைய மாத்திரைகள் கொடுக்ககூடாது என்று FDA கூறுகிறது.

மூக்கடைப்புக்கு பயன்படும் மருந்துகளும் தற்காலிக நிவாரணம் தான் தருகிறது. தொடர்ந்து பயன் படுத்துவது கெடுதி செய்யும்.அவற்றில் அடங்கியுள்ள Pseudoephedrine இரத்த அழுத்தத்தை அதிகரித்து இதய நோயில் கொண்டு விடும்.தொடர்பாக புராஸ்டேட், தைராய்டு, நீரிழிவுக்கு இழுத்து செல்லும். மூக்கடைப்பு மருந்துகளில் காணப்படும் phenylpropanolamine (PPA) பக்க வாதத்திற்கு அடிகோலும் .எனவே இம்மருந்து உங்களிடமிருந்தால் தூக்கி எறிந்து விடவும்.
உறங்குவதிலோ , பேசுவதிலோ இடையூறு இருந்தால் ஒழிய dextromethorphan அடங்கிய இருமல் மருந்துகள் உபயோகிக்க வேண்டாம்.சில இருமல் மருந்துகள் தூக்க கலக்கத்தை ஏற்படுத்தி கை கால்களை தள்ளாடச் செய்து விடும்.அது விபத்துக்களுக்கு ஆளாக்கும்.சிறிய இருமலை வாயை துணி கொண்டு பொத்தி சகித்துக் கொள்வது நல்லது. சுவாசக்குழாயிலிருந்து சளியையும் கிருமிகளையும் வெளியேற்றத்தான் இருமல் உண்டாகிறது. இது நல்லது. இருமல் ஒரு நோயல்ல.

காய்ச்சல் வந்துவிட்டால் என்ன சாப்பிடலாம்?

காய்ச்சல் வந்துவிட்டாலே எதுவும் சாப்பிடக் கூடாது என்று பொதுவான கருத்து உள்ளது. அது மிகவும் தவறானது. ஆனால், காய்ச்சல் நேரத்தில்தான் உடலுக்கு அதிக கலோரிச் சத்து தேவைப்படுகிறது.எனவே ஊட்டச் சத்தான உணவுக்கு, காய்ச்சல் நேரத்திலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம். காய்ச்சல் வந்தால் குடலில் அழற்சி இருக்கும்; நாக்கில் கசப்புணர்வு இருக்கும். நோய்த் தொற்று இருக்கும் நிலையில் குமட்டல், வாந்தி உணர்வும் இருக்கும்.

மிருதுவான, அதே சமயம் காரம் - மசாலா இல்லாத திரவ உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சத்துமாவு கஞ்சி, ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம், வேக வைத்த காய்கறிகளை மசித்துச் சாப்பிடலாம். பழங்கள் சாப்பிடலாம்.பழச்சாறு சாப்பிடலாம். ஏனெனில் காய்ச்சல் இருக்கும் நிலையில் வெப்ப வெளியேற்றம் காரணமாக உடலின் உயிர்ச் சத்துகளில் ஒன்றான நீர்ச் சத்து அளவு குறையும்.எனவே குடிநீர் அதிகம் குடிக்க வேண்டும். காய்ச்சல் இருக்கும் நிலையில் பழச்சாறு, இளநீர், மோர் குடிக்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. இவற்றைச் சாப்பிட்டால் காய்ச்சல் அதிகமாகும், ஜலதோஷம் வந்து சேரும் என்ற கவலையும் ஏற்படுகிறது.இது வீண் கவலை. காய்ச்சல் இருந்தாலும் இவற்றைச் சாப்பிடும் நிலையில் உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்து கிடைத்து, காய்ச்சல் குறையும்.

காய்ச்சல் என்பது ஓர் அறிகுறிதான்.நோய்த் தொற்று (viral infection) காரணமாகவே காய்ச்சல் ஏற்படுகிறது. எனவே காய்ச்சல் குறைந்தவுடன், நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தவும் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் புரதச் சத்து அதிகம் தேவை.இந் நிலையில் பால், தயிர், பருப்பு - கீரைகள் - காய்கறிகள் நிறைந்த உணவு ஆகியவற்றை காய்ச்சல் விட்ட பிறகு தொடர்ந்து சாப்பிட வேண்டும். பழங்கள் சாப்பிடுவதும் புரதச் சத்தை உடலுக்கு அளிக்கும்.அசைவம் சாப்பிடுவோர் முட்டை சாப்பிடலாம். அசைவ உணவில் காரம்-மசாலா அதிகம் கூடாது.

நோயெதிர்ப்பு சக்தியூட்டும் உணவுகள்

எந்த ஒரு நோய் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடும் சக்தியை, நம் உடம்பானது தானாகவே உற்பத்தி செய்து கொள்ளும். இது, நோய்களை உருவாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராகச் சண்டைப் போட்டு அவற்றை உடலில் இருந்து வெளியேற்றிவிடும் அல்லது அழித்துவிடும்.

நீங்கள் உட்கொள்ளும் வைட்டமின்கள் (Minerals) மற்றும் கனிமங்களின் (Vitamins) அளவைப் பொறுத்துத்தான் இந்த சக்தி இயங்கும். அதனால் இந்தச் சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டாலே போதும், மருந்தின்றி காய்ச்சலை விரட்டியடிக்கலாம்!

நோயெதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ள சில சத்துக்களையும் உணவுகளையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • சத்துள்ள உணவு அதோடு vitamin A, the vitamin B complex (vitamins B-1, B-2, B-5, B-6, folic acid) , vitamin C, சரியான அளவு எடுத்துக்கொள்வது நோயெதிர்ப்பு neutrophil களை உருவாக்கி நோய்க்கிருமிகளிடமிருந்து உடலைப் பாதுகாக்கும்.
  • காப்பர் சத்து: நம் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள்தான் தொற்றுநோய்க் கிருமிகளை முழுவேகத்துடன் எதிர்க்கக்கூடியவை.காப்பர் சத்தானது வெள்ளை அணுக்களுக்கு அந்த சக்தியை அளிக்கக்கூடியதாக உள்ளது. பனிவரகு, சாமை உள்ளிட்ட தினைவகைகள், பீன்ஸ், சன்னா, பட்டாணி, தாமரைத்தண்டு, செல்மீன்கள், சாக்லெட் ஆகியவற்றில் காப்பர் சத்து அதிகம் உள்ளது.
  • வைட்டமின் E:இளமையிலிருந்தே வைட்டமின் ணி சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டு வருபவர்களுக்கு, வயதானபின்னும் ஃப்ளு காய்ச்சல் போன்ற தொந்தரவு வராது. காரணம், வைட்டமின் E யானது அதிகமாக உடலுக்குள் செல்லச் செல்ல... நோயெதிர்ப்பு உயிரணுக்களின் அளவானது இரண்டு மடங்காக உற்பத்தியாகியிருக்கும். இதனால் அவை காய்ச்சலைத் தரும் வைரஸ்களை எளிதில் கொன்றுவிடும்.சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், பட்டாணி, கோதுமை, தானிய வகைகள், காய்கறி எண்ணெய்கள், மீன், மீன் எண்ணெய், முட்டை, கோழி ஆகியவற்றில் வைட்டமின் E அதிகம் .
  • வைட்டமின் B12: B12ன் தலையீட்டால்தான் காய்ச்சலைத் தரும் கிருமிகள் உடலுக்குள் வரும்போதெல்லாம் நோயெதிர்ப்புச் சக்தியை உற்பத்தி செய்யும் செல்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. வெள்ளை ரத்த அணுக்கள் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்ய B12தான் காரணம்.ஈரல், முட்டை, பால் போன்ற அசைவ உணவுகளில் B12 மிக அதிகமாக உள்ளன. பீன்ஸ், ஆரஞ்சு, கீரைவகைகள், பட்டாணி, சூரியகாந்திவிதைகள், முழுதானிய விதைகள் ஆகியவற்றிலும் இச்சத்து போதியளவு உள்ளன.
  • துத்தம் (ZINC):உங்கள் உடலில் உள்ள நோயெதிர்ப்புச் சக்தியை மேலும் மேலும் வளர்க்க துத்தச்சத்து அவசியமாக உள்ளது. தானிய வகைகள், அனைத்துத் தினைவகைகள், பீப், போர்க் போன்றவற்றில் துத்தச்சத்து அதிகமாக உள்ளன.
  • தாவர வேதிப்பொருள்:உங்கள் உடலில் உள்ள நோயெதிர்ப்புச் சக்தியை வலுவாக்கி, நோய்க்கிருமிகளை அழித்து நிர்மூலமாக்க தாவர வேதிப் பொருட்கள் அவசியம்தேவை.வெங்காயம், ஆப்பிள் (குறிப்பாக தோல்கள்), கறுப்பு டீ, பூண்டு, மிளகு, பெர்ரி, திராட்சை, தக்காளி ஆகியவற்றில் வேண்டிய மட்டும் தாவர வேதிப் பொருட்கள் உள்ளன. இவை காய்ச்சலை (Flu) உருவாக்கும் கிருமிகளை அண்டவிடுவதில்லை.
  • சந்தோஷமான சூழல்:குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமாக இருக்கும் சூழலை உருவாக்கிக்கொள்வது என்பது காய்ச்சலை வரவிடாமல் தடுக்கும் ஓர் உத்தியாகும். அன்பான பேச்சு, ஆதரவான நடவடிக்கைகள், சுற்றுலா, இசை.... இவையாவும் மனதை சந்தோஷப்படுத்துவதால், நம் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி நாளுக்கு நாள் கூடுகிறதாம்.

கிருமிகள்- கண்ணுக்கு தெரியாத வில்லன்கள்

நம்மைசுற்றி எல்லா இடங்களிலும் கோடிக்கணக்கான கண்ணுக்குத்தெரியாத நோய்கிருமிகள் நிறைந்திருக்கிறது. நம் நோயெதிர்ப்பு சக்தி வலுவிழக்கும் நேரம் பார்த்து இவை நம்மை தாக்கி நோயாளியாக்கக் காத்திருக்கின்றன. பொதுவாக எங்கெங்கே இந்த கிருமிகள் கூடாரம் போட்டு தங்கக் கூடும் என்று பார்ப்போம். அவற்றை இல்லாது ஒழிப்பதன் மூலம் உடல் நலத்தைக் காப்போம்.
இதெல்லாம் நீங்கள் உசாராய் இருக்க வேண்டி சொன்னது தான். பயந்து கவச உடை போடுமளவுக்கு போக வேண்டாம். முடிந்த அளவு விழிப்பாக இருப்போம். அதையும் மீறி இந்த கண்ணுக்கு தெரியாத வில்லன்கள் தாக்காமல் இயற்கை நமக்கு தந்த கவசமான நோய் எதிர்ப்பு சக்தியையும் சத்தான உணவுகள் உண்பதன் மூலம் வளர்த்துக் கொள்வோம்.
  • சமையல் அறையும் சுற்றுப்புறமும் சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.
  • சமையலறையில் பாத்திரம் துலக்க உதவும் ஸ்பாஞ்ச் அதிக அளவு கிருமிகள் இருக்கும் இடம். அதன் ஒரு சதுர இஞ்ச் பரப்பில் 134,000 பாக்டீரியாக்கள் இருக்கலாம் என சோதனை முடிவுகள் காட்டுகின்றன. அதன் ஈரப்பதம் கிருமிகள் பல்கி பெருகுவதற்கு ஏற்ற சூழ்லைக் கொடுக்கிறது. வயிற்றோட்டட்டம் மற்றும் வயிற்று வலி உருவாக்கும் Salmonella , Campylobacter போன்ற கிருமிகள் அதில் இருக்கலாம்.
  • சமையலறை ஸ்பாஞ்சுகளை வாரம் ஒரு முறை மாற்றவும். அல்லது ப்ளீச் கலந்த நீரில் 15 நிமிடம் ஊற வைத்து கழுவி உபயோகப்படுத்தவும்.
  • சமையலறை பாத்திரங்கள் கழுவும் தொட்டி கிருமிகள் நிறைந்திருக்கும் மற்றொரு இடம். சமையலறை கழிவு நீர் குழாய்களில் ஒரு சதுர இஞ்ச் இடத்தில் சுமார் 500,000 பாக்டீரியாக்கள் சாதாரணமாக காணப்படுமாம்.
  • சோப்புக்கள் கிருமிகளை கொல்வதில்லை.பிளீச்சிங் பவுடர் கலந்த தண்ணீர் தான் கிருமிகள் ஒழிப்பதற்கு சிறந்தது.
  • சமயலறை மற்றும் பாத்ரூம்களில் உள்ள தண்ணீர் குழய்களின் கைப்பிடிகள், கதவுகள் கைப்பிடிகள் போன்றவற்றில் ஏராளமான் கிருமிகள் இருக்கக்கூடும். ஒரு சதுர இஞ்சில் 13,000 பாக்டீரியாக்களும் 6000 மற்ற கிருமிகளும் இருக்கலாம்.
  • சமையலறை கட்டிங் போர்டு ஏராளமான கிருமிகளின் உறைவிடம்.
  • கழிவறை பீங்கானில் சதுர இஞ்சுக்கு சராசரி 3.2 மில்லியன் பாக்டீரியாக்கள் இருக்கின்றன.
  • குளியல் தொட்டிகளில் நீர் வெளியேறும் பகுதியில் சதுர இஞ்சுக்கு 120,000 சராசரி பாக்டீரியாக்கள் இருக்கின்றன.
  • குளியலறை திரை சீலைகளில் Sphingomonas மற்றும் Methylobacterium போன்ற பாக்டீரியாக்கள் பெருமளவில் பதுங்கிஇருக்கின்றன.
  • வாஷிங் மெசினிலும் மிகப்பெருமளவு கிருமிகள் நிறைந்திருக்கிறது. கழுவிய துணிகளிலும் எளிதில் இக்கிருமிகள் தொற்றி விடுகின்றன.
  • வாக்குவம் கிளீனர்களின் புருஸ் களில் பெருமளவு பாக்டீரியாகாள் இருக்கின்றன, அதில் 50% fecal bacteria மற்றும் 13% e-coli bacteria காணப்படுகின்றன.சுத்தமான இடத்தை முதலிலும் அசுத்தமான இடத்தை கடைசியிலும் சுத்தம் செய்வது மூலம் கிருமிகள் எல்லா இடமும் பரவாது தடுக்கலாம். வாக்குவம் கிளீனர் உபயோகப்படுத்திய பின் கைகளை சுத்தமாக கழுவிக்கொள்வது அவசியம்.
  • மிதியடிகளை சுத்தமாக வைத்திருக்கவும்.
  • படுக்கைகள், படுக்கை விரிப்புகள் ,போர்வைகள் ,தலையணைகள் பல்வேறு வகை கிருமிகள் மற்றும் நுண்ணிய பூச்சிகளின் உறைவிடம் .எப்போதும் சுத்தமாக வைத்திருக்கவும். இல்லையேல் பலவிதமான அலர்ஜிகளை இக்கிருமிகள் ஏற்படுத்தக்கூடும். இந்த துணிகளை கழுவிய பின் பூச்சிகள் சாகும் வரை கொதிநீரில் போட்டு, பின் உலர்த்தி உபயோகிக்கவும்.
  • குளிர் பதன பெட்டியில் கெட்டுப்போன, நாள்பட்ட எதையும் வைக்காதீர்கள்.
  • லாட்ஜுகளில் உள்ள போர்வைகள், ரிமோட் கண்ட்ரோல்களில் ஆபத்தான கிருமிகள் காணப்படலாம்.
  • பொது தொலை பேசி கிருமிகளின் சந்தை.
  • உதடுகளை அடிக்கடி நாக்கால் நக்கி ஈரப்படுத்தும் பழக்கம் நல்லதல்ல. உதடுகளின் வெளிப்புறம் நிறைய கிருமிகள் இருக்கலாம்.
  • நாற்றமான சூழல் பாக்டீரியாக்களின் தேசம். அங்கே அதிக நேரம் நிற்க வேண்டாம்.
  • சாலையோர உணவு விடுதிகளில் உணவு உண்பதை தவிர்க்கவும்.
  • டின்களில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள் அதன் விளிம்புகளில் நம் உதடு படும் இடங்கள் கிருமிகள் இருக்கக்கூடும்.மூடியுள்ள பாட்டில்கள் நல்லது.
  • காலணிகளை வீட்டின் வெளியே கழற்றியிடவும்.
  • பாத்ரூம் காலணிகளில் கிருமிகள் அதிகம் இருக்கும். சுத்தமாக வைத்திருக்கவும்.
  • வீட்டில் எல்லா இடமும் ஈரப்பதமின்றியும் சூரிய வெளிச்சம் படும்படியும் பார்த்துக்கொள்வோம்.
  • கைகள் நோய் கிருமிகளின் வளர்ப்புப் பண்ணை. எனவே நோயாளிகள் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஜலதோசத்துடன் கூடிய காய்ச்சல் இருந்தால் அடிக்கடி கையை கழுவுதல் நல்லது. நோய்த்தொற்றை குறைக்கும்.
  • பிறருடன் கைகுலுக்கும் போது ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கவும். பிறரது கைகள் எந்த அளவு சுத்தமானவை என்பது தெரியாது. சும்மா விஷ் பண்ணுதே நல்லது.
  • உணவு உண்ணும் முன்பும் பிறகும் கைகளை சுத்தமாக கழுவுவது மிக முக்கியம்.
  • ரிமோட் கண்ட்ரோல்கள், மொபைல் ஃபோன்கள், டெலிஃபோன் பட்டன்கள் , ஃபிரிட்ஜ் கதவு கைப்பிடி , கம்ப்யூட்டர் கீ போர்டு, மவுஸ், கதவு குமிழ்கள், சுவிட்சுகள், ரூபாய் நோட்டுகள், பேருந்துகளில் கைப் பிடிகள். பேனாக்கள், விசிட்டிங் கார்டுகள், மருத்துவமனை வராண்டாக்கள் , கைப்பிடிச்சுவர்கள், புத்தகங்கள் இவை யாவும் நோய்கிருமிகள் சர்வ சாதாரணமாக புழங்கும் இடங்கள். ஜாக்கிரதையாக இருங்கள்.
  • ரூபாய் நோட்டுகளை எச்சில் தொட்டு எண்ணாதீர்கள்.
  • பேருந்துகள், சினிமா தியேட்டர்கள், மருத்துவமனைகள் எங்கும் நோய்கிருமிகள் நிறைந்திருக்கும்.
  • தினமும் குளிப்பது மிக நல்ல பழக்கம்.இது தினமும் உடலில் தங்கும் கிருமிகளை நீக்குகிறது.
  • டால்கம் பவுடர் போடுவது தோலில் கிருமிகள் வளர்வதை தடுக்கிறது.
  • அழுக்கான ஆடைகளை உடுக்காதீர்கள்.
  • தண்ணீர் தேங்க விடாமல் நோய் பரப்பும் கொசுக்கள் பெருகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • தூங்கும் போது கொசு வலைகள் உப்யோகித்து கொசுவால் பரவும் டெங்கு, மலேரியா,போன்ற வைரசுகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்
  • வைரஸ் அதிகமாக புழங்கக்கூடும் என கருதும் மேற்கண்ட இடங்களை சோப்பு மற்றும் டெட்டால் போன்ற மருந்துகள் கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்துவது நல்லது.
  • வீட்டில் சேரும் கழிவுப் பொருட்களையும் குப்பைகளையும் நாள் தோறும் அப்புறப்படுத்த வேண்டும்.

நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்


நம் உடலானது நிலம்நீர்நெருப்புகாற்றுஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம்.



பஞ்ச பூதங்களில் பாதிப்பு ஏற்பட்டால் நம் உடலில் தோன்றும் அறிகுறிகளை இந்த படத்தில் பார்க்கலாம்.

உணவு [ நிலம் ] [ இரைப்பை , மண்ணீரல், கணையம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] 

  • பசி இல்லாதபோது சாப்பிடக்கூடாது. [ வாயு தொந்தரவு, அல்சர், அஜீரணம், வயிற்று வலி, சுகர் / நீரிழிவு, இரத்த அழுத்தம், எலும்புத் தேய்மானம் போன்ற தொந்தரவுகளுக்கு அடிப்படை காரணமே பசி இல்லாதபோது சாப்பிடுவது தான் ] அப்படி பசி இல்லாதபோது சாப்பிட நேர்ந்தால் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் இனிப்பு சாப்பிட வேண்டும்

  • நாம் பால், டீ, காப்பி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்த்தாலே பசி ஒழுங்காக எடுக்கும். 

  • சாப்பிடும் முன் கை, கால், முகம் கழுவ வேண்டும்.

  • உணவில் ஆறு சுவைகள் [ இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம் ] இருக்குபடி பார்த்துகொள்ளுங்கள். ஆறு சுவையையும் திகட்டும் வரை உண்ண வேண்டும்.

  • நாக்கால் சுவையை நன்கு ருசித்த பின்னரே விழுங்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும். சாப்பிடும்பொழுது கண்களை மூடி, உதட்டை மூடி, உதட்டை பிரிக்காமல் மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும். ஏனென்றால் காற்று நம் ஜீரணத்திற்கு எதிரி. 

  • முடிந்தவரை சாப்பிடுவதற்கு அரைமணிநேரம் முன்பும் பின்பும் நீர் அருந்துவதை தவிருங்கள். தேவை ஏற்பட்டால் சிறிதளவு குடித்துக் கொள்ளலாம். ஏனென்றால் நீர் நம் ஜீரணத்திற்கு எதிரி .

  • குளித்த பின் 45 நிமிடத்திற்குப் பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு 2 ½ மணி நேரத்திற்குக் குளிக்க கூடாது. அப்படி குளித்தால் நம் உடம்பானது உணவை ஜீரணிபதர்க்கு பதிலாக உடலை வெப்பத்தை சமநிலை படுத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கும்.

  • பேசிக் கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, டிவி பார்த்துக்கொண்டோ சாப்பிடக்கூடாது [ கவனம் சிதறாமல் இருப்பதற்காக ]

  • கால்களைத் தொங்க வைத்து அமர்ந்து சாப்பிடக்கூடாது.

  • முதல் ஏப்பம் வந்த உடனோ அல்லது உணவின் சுவை குறைந்து விட்டாலோ அல்லது போதும் என்ற உணர்வு வந்துவிட்டாலோ சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். அது தான் நாம் சாப்பிட வேண்டிய அளவு. 


நீர் [நீர்] [ சிறுநீரகம், சிறுநீர்ப்பை, விதைப்பை (ஆண்களுக்கு), கர்பப்பை (பெண்களுக்கு) ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] 

  • தண்ணீரைக் கொதிக்க வைத்தோ அல்லது நீரை வடிகட்டியோ குடிபதால் அதில் உள்ள தாது உப்புக்களை இழக்க நேரிடும். அந்த தாது உப்புக்களுகாக தான் நாம் நீரையே அருந்துகிறோம். அதற்க்கு பதிலாக நீரை மண்பானையில் 2 மணிநேரம் வைத்தபின் பயன்படுத்தலாம். பின்னர் நீரை செம்பு குடத்தில் வைத்து அருந்தலாம்.

  • தாகம் எடுத்தால் உடனே தேவையான அளவு மெதுவாக வாய்வைத்து சப்பிக் குடிக்க வேண்டும்.

  • மினரல் வாட்டர் / Package Drinking Water / Cane Water பயன்படுத்தக் கூடாது. அப்படி குடிக்க நேர்ந்தால் உணவில் அதிக நீர் சத்து உள்ள உணவுகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது மோர், இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, பழச்சாறு [ பிரெஷ் ஜூஸ் ] போன்றவற்றை பருகலாம். 

  • தாகம் இல்லாமல் தண்ணீர் குடிக்கக் கூடாது.

  • சிறுநீர் கழித்தால் உடனே தேவையான அளவு நீர் அருந்த வேண்டும்.

  • நீரை அன்னாந்து குடிக்கக் கூடாது. அப்படி குடித்தால் தேவைக்கு அதிகமாகவே குடித்துவிடுவோம். நீரை நிதானமாக வாய்வைத்து சப்பி குடிக்க வேண்டும். 

  • நாம் குடிக்கும் எந்த ஒரு நீரையும் / பானத்தையும் [ பிரெஷ் ஜூஸ், மோர், இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு,... ] அதில் உள்ள சுவையை நாக்கு உறிந்த பின் சுவை இல்லாத நீரை தான் விழுங்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும். 

  • பால் அருந்துவதை தவிர்த்தாலே நம் உணவு எளிதில் ஜீரணமாகும். நன்றாக பாசி எடுக்கும். அப்படி பால் அருந்த நேர்ந்தால் பசி எடுக்கும் வரை பொறுமையாக இருந்து உணவை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 

  • நாம் டீ, காப்பி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் . இல்லையென்றால் நம் எலும்புகள் எளிதில் வலுவிழந்துவிடும், சிறுநீரக செயலிழப்பு ஏற்படும், சிறுநீரக கற்கள் ஏற்படும்.


ஓய்வு [தூக்கம்] [ஆகாயம்] [ கல்லீரல், பித்தப்பை ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] 

  • முடிந்தவரை இரவு 10 மணிக்கு தூங்க முயற்ச்சிக்கவும். இரவு 11 மணி - 3 மணி வரை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த நேரத்தில் தான் நம் கல்லீரலும் பிதப்பையும் உடம்பிலுள்ள இரசாயண கழிவுகளை முழுவீச்சில் வெளியேற்றும்.

  • வடக்கே தலை வைத்துப் படுப்பதை தவிர்க்கவும்.

  • தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.

  • புகைபழக்கம் மற்றும் டீ, காபி, செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இவை அனைத்துமே நம் தூக்கத்திற்கும் உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும். 

  • இரவு 10 மணி நேரத்திற்குள் படுத்துவிட்டு விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.

  • படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.

  • குளிர் காலங்களில் வெறும் தரையில் படுக்கக் கூடாது. உடல் அதிகம் குளிர்ச்சியடைந்தாலும் தூக்கம் கெட்டுவிடும். 

  • உடல் உழைப்பு உள்ளவர்கள் குறைந்தது 6 மணிநேரம் தூங்க வேண்டும். மூளைக்கு மட்டுமே வேலை கொடுப்பவர்கள் குறைந்தது 6 மணிநேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.

  • இரவில் பல் விலக்கிப் படுத்தால் நன்றாகத் தூக்கம் வரும்.

  • முடிந்தவரை வெறும் கையால் உப்பு கலந்த நீரில் விளக்கவும். ஈறுகளுக்கு மசாஜ் செய்தல் பற்களுக்கு வலிமை தரும். 

  • தாடைக்குக் கீழ் தடவிக் கொடுத்தால் நன்றாகத் தூக்கம் வரும்.

  • தலையில் உச்சிக்கும் சுழிக்கும் நடுவில் மசாஜ் செய்தால் நன்றாகத் தூக்கம் வரும்.

  • நாம் தூங்கும் இடங்களில் இயற்கையான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள். இல்லையென்றால் இரவு முழுக்க கனவுகளால் அவதிப்படும் சுழல் உருவாகும்.

  • இரவில் எளிதில் ஜீரணமாககூடிய உணவை உண்டால் தூக்கமின்மை தொந்தரவு ஏற்படாது. 

  • தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.

  • இரவு தூக்கம் வரவில்லையென்றால் அல்லது தூக்கம் கலைந்துவிட்டாலும் இரண்டு கைகளிலும் கையின் கட்டை விரல் (Thumb Finger) நுனியையும் நடு விரல் (Middle Finger) நுனியையும் தொடுமாறு வைத்துக்கொண்டு மற்ற அனைத்து விரல்களையும் நேராக வைத்துக்கொண்டு இருந்தால் (படத்தில் இருப்பதை போல) எளிதில் தூக்கம் வரும். இதற்காக மருத்துவரை தேடி ஓட வேண்டாம். 



காற்று [வாயு] [ நுரையீரல், பெருங்குடல் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] 

  • புகைபழக்கம்,கொசுவை விரட்டிகள் நம் சுவாசபாதை மற்றும் நுரையீரலை பலகீனப்படுத்தும். இவையே நமக்கு துக்க உணர்வையும் விரக்தியான மனநியையும் கொடுக்கும். மலச்சிக்கலுக்கும் வழிவகுக்கும்.

  • கொசுவர்த்தி சுருள் மற்றும் கொசுவை விரட்டுவதற்காக நாம் உபயோகபடுத்தும் அனைத்து இரசாயணங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தக் கூடாது [ நச்சு கலந்த காற்றை சுவாசிக்காமல் இருக்க ]

  • வீடு, அலுவலகம், தொழிற்சாலை, படுக்கை அறை எங்கும் எப்பொழுதும் காற்றோட்டம் நன்றாக இருக்க வேண்டும்.

  • தூங்கும் பொழுது A/C ஐ பயன்படுத்தினாலும் ஜன்னல்களை அடைத்து வைக்கக் கூடாது [ நாம் சுவாசித்த காற்றயே (கரியமில வாயு - Carbon-dioxide) மறுபடியும் மறுபடியும் சுவாசிக்காமல் இருக்க ] 

  • தலையை போர்வையால் முழுமையாக போர்த்தி கொண்டு தூங்க கூடாது [ நாம் சுவாசித்த காற்றயே (கரியமில வாயு - Carbon-dioxide) மறுபடியும் மறுபடியும் சுவாசிக்காமல் இருக்க ] 

  • மரங்கள் தான் காற்றை உருவாக்குகிறது மின்விசிறியோ / குளிர்சாதனமோ அல்ல என்பதை புரிந்துகொண்டு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு தூங்குங்கள். அப்படி கொசுத்தொல்லை இருக்கிறதென்றால் ஜன்னலில் கொசுவலையை வாங்கி மாடிக்கொள்ளுங்கள்.

  • சளி என்பது வியாதி கிடையாது. நம் நுரையீரலில் உள்ள கழிவுகளை நம் உடலானது தும்மல், மூக்கின் மூலம் நீராக, சளி முதலியவற்றின் மூலம் தான் வெளியற்றும். அதனால் இவற்றை அடக்க ஆங்கில மருந்தேதும் உண்ண கூடாது. அப்படி மருந்து உண்டால் முச்சுத்திணறல், மூச்சிறைப்பு, ஆஸ்துமா, வறட்டு இருமல், சைனஸ், மலச்சிக்கல், நிமோனியா... போன்ற பல வியாதிகள் உண்டாகும். 

  • சளியை வெளியேற்ற வேறு எந்த மருத்துவத்தை வேண்டுமானால் பயன்படுத்தலாம். எந்த உணவையும் உண்டால் சளி வரும் என்று ஒதுக்காதீர்கள். முடிந்தவரை எந்த பழங்கள் உண்டால் சளி வருகிறதோ அதை உண்ணவும். ஏனென்றால் சளிப்படலம் தான் நமக்கு குடற்புண் (Ulcer) வராமல் நம்மை பாதுகாக்கிறது. மற்றும் மலச்சிக்கல் இல்லாமல் மலம் எளிதில் வெளியேற உதவுகிறது. மலச்சிக்கல் இல்லாமல் இருந்தால் நமக்கு குடலிறக்கம், குடலில் புற்றுநோய் போன்ற தொந்தரவுகள் ஏற்படாது. 


உழைப்பு [நெருப்பு] [ இருதயம், சிறுகுடல், இதயமேலுரை, மூவெப்பமண்டலம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்]

  • பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.

  • உழைப்புக்கேற்ற உணவு அல்லது உணவுக்கேற்ப உழைப்பு வேண்டும்.

  • தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புகளுக்கும் வேலை கொடுக்க வேண்டும்.

  • இரத்தம் ஓட இருதயம் உதவும். ஆனால் நிண நீர் ஓட உடல் உழைப்பு மட்டுமே உதவும்.

  • உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு நிணநீர் ஓட்டம் நன்றாக இருக்காது. இவை தான் நம் உடம்பில் தோன்றும் பல நோய்களுக்கு காரணம்.

  • தினமும் ஏதாவது உடற்பயிற்சி, நடைபயிற்சி, ஜாக்கிங் அல்லது ஏதாவது விளையாட்டில் ஈடுபடுவது நல்லது.

  • காய்ச்சல் என்பது நோய் அல்ல. நம் உடலில் தேங்கும் கழிவுகள் மலம், சிறுநீர், வியர்வை, சளி, வாந்தி போன்றவற்றின் மூலம் வெளியேற்ற இயலவில்லையெனில் நம் உடலே உடலின் வெப்பத்தை அதிகப்படுத்தி அழித்துவிடும். மேலும் நம் உடலில் கிருமிகளும் காய்ச்சலின்போது அளிக்கப்படும். 

  • காய்ச்சலை தடுக்க மருந்து உண்ணாமல் இருந்தால் ஒருமுறை நம் உடலில் வந்த கிருமிகள் நம் வாழ்வில் எப்போது வந்தாலும் நம் உடலே அதை அழிக்கும் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடும். 

எனவே காய்ச்சல் வந்தால் ஓய்வு எடுத்து பசித்தால் மட்டுமே உணவு உண்டு தாகம் எடுத்தால் மட்டுமே நீர் அருந்தி நம் உடம்பின் ஒட்டுமொத்த சக்தியையும் கழிவுகளை வெளியேற்றவும் கிருமிகளை அளிக்கவும் உபயோகப்படுத்த நாம் ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நாம் தொலைகாட்சியில் செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தப்படும் எந்த வியாதிக்கும் பயப்பட அவசியம் இல்லை

வெள்ளி, 12 டிசம்பர், 2014

கம்ப்யூட்டர் கிராஷ்



கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும்.

சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும்.
இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.
ஹார்ட்வேர் பிரச்னை
கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் குறைந்த பட்சம் 16 இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start => Settings => Control pannel => System => Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.
ரம் மெமரி சிப்ஸ்
ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.
ஹார்ட் டிஸ்க் டிரைவ்
பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.
வீடியோ கார்ட்
சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். StartSettingsControl PanelDisplaySettings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.
வைரஸ்
பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.
பிரிண்டர்
பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.
சாப்ட்வேர்
முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.
அதிக வெப்பம்
இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.
மின் ஓட்டம்
கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு